எனக்குப் பெயரிடத் துணிந்த
அப்பாவை நினைத்தால்
இப்போதும் சிரிப்பு வருகிறது
வேறு என்னென்ன பெயர்களை
யோசித்தீரோ என்றதற்கு
உலகப் புரட்சியாளர்களின்
பதிநான்குப் பெயர்களைப்
பட்டியலிட்டார்
அப்பாவே மகனுக்குப்
பெயரிடலாமெனும்
ஒரே ஒரு உரிமையில்
எதுவேண்டுமானாலும்
யோசிக்கலாமா என்றேன்.
பெயராவது என் ஆசைக்கு
இருக்கட்டுமென்று
எண்ணியது தப்பா என்பதுபோல
பார்த்த பார்வை
மனதிலேயே தங்கிவிட்டது.
அதைவிட,
உன்விஷயத்தில் எதுதான்
என் சொல்படி நடந்திருக்கிறது
என்றதும் அழுதுவிட்டேன்.
அன்றுமுதல்
அப்பாவின் பெயரான
பரமசிவமும் ரொம்பவே
பிடித்துப்போனது
- யுகபாரதி
3 comments:
அண்ணா ... வணக்கம்
அண்ணா... அந்த 14 புரட்சியாளர்களின் பெயர்களையும் கூறுங்கள்...
அதோடு...எனக்கு மகன் பிறந்துள்ளார்...அவருக்கும் நீங்கள் பெயர் சூட்டுவீர்களானாள் நான் உள்ள படியே மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வேன் அண்ணா...
மகிழ்வான தருணங்களை எதிர்பார்த்து....
Post a Comment